One moment please..
 
செய்தி
(2ம் இணைப்பு)
மஹிந்தவின் சகோதரி நிரூபமாவுக்கு இராமேஸ்வரத்தில் கறுப்புக்கொடி (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 09 நவம்பர் 2009, 04:22.39 PM GMT +05:30 ]
ராமேஸ்வரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே உறவினருக்கு ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் சார்பில் கறுப்புகொடி காட்டப்பட்டது.

ராஜபக்சே சகோதரி நிருபமா ராஜபக்சே, அவரது கணவர் குமரேசன் நடராஜனுடன் நேற்று ராமேஸ்வரம் வந்தார். நேற்று இரவு ராயல் பார்க் என்னும் ஹோட்டலில் தங்கிய இவர்களுக்கு மாவட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.
 
ராஜபக்சே சகோதரி வருகை ரகசியமாக வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நிருபமா ராஜபக்சே, அவரது கணவர் குமரேசன் நடராஜனுடன் கண்டலூர் செட்டியார் மண்டபத்தில் பூஜை செய்தார்.
 
ராஜபக்சே சகோதரி வருகை குறித்து அறிந்த செய்தியாளர்கள் ராமேஸ்வரம் விரைந்தனர். அப்போது குமரேசன் நடராஜனிடம், பொதுவாக ராமேஸ்வரத்துக்கு பாவம் கழிக்கத்தான் அனைவரும் வருவார்கள். நீங்களும் பாவத்தை கழிக்கத்தான் வருகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். 
 
இந்த கேள்விக்கு கோபம் அடைந்த குமரேசன் நடராஜன், என்ன இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு மற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சென்று விட்டார்.
 
ராஜபக்சே சகோதரி நிருபமா ராஜபக்சே, அவரது கணவர் குமரேசன் நடராஜன் வருகைக்கு, சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் உள்பட ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்கள் பலர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
 
ராமேஸ்வர மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டிருக்கும் இந்நேரத்தில் ராஜபக்சே சகோதரி வருகை முன்கூட்டியே தெரிந்திருந்தால், மிகப்பெரிய போராட்டமாக வெடித்திருக்கும் என்று மீனவ அமைப்புகள் தெரிவிக்கின்றன.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்