|
|
|
|
| மஹிந்தவின் சகோதரி நிரூபமாவுக்கு இராமேஸ்வரத்தில் கறுப்புக்கொடி (வீடியோ இணைப்பு) |
| [ திங்கட்கிழமை, 09 நவம்பர் 2009, 04:22.39 PM GMT +05:30 ] |
ராமேஸ்வரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே உறவினருக்கு ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் சார்பில் கறுப்புகொடி காட்டப்பட்டது. |
|
ராஜபக்சே சகோதரி நிருபமா ராஜபக்சே, அவரது கணவர் குமரேசன் நடராஜனுடன் நேற்று ராமேஸ்வரம் வந்தார். நேற்று இரவு ராயல் பார்க் என்னும் ஹோட்டலில் தங்கிய இவர்களுக்கு மாவட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு கொடுத்துள்ளனர். ராஜபக்சே சகோதரி வருகை ரகசியமாக வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நிருபமா ராஜபக்சே, அவரது கணவர் குமரேசன் நடராஜனுடன் கண்டலூர் செட்டியார் மண்டபத்தில் பூஜை செய்தார். ராஜபக்சே சகோதரி வருகை குறித்து அறிந்த செய்தியாளர்கள் ராமேஸ்வரம் விரைந்தனர். அப்போது குமரேசன் நடராஜனிடம், பொதுவாக ராமேஸ்வரத்துக்கு பாவம் கழிக்கத்தான் அனைவரும் வருவார்கள். நீங்களும் பாவத்தை கழிக்கத்தான் வருகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இந்த கேள்விக்கு கோபம் அடைந்த குமரேசன் நடராஜன், என்ன இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு மற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சென்று விட்டார். ராஜபக்சே சகோதரி நிருபமா ராஜபக்சே, அவரது கணவர் குமரேசன் நடராஜன் வருகைக்கு, சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் உள்பட ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்கள் பலர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வர மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டிருக்கும் இந்நேரத்தில் ராஜபக்சே சகோதரி வருகை முன்கூட்டியே தெரிந்திருந்தால், மிகப்பெரிய போராட்டமாக வெடித்திருக்கும் என்று மீனவ அமைப்புகள் தெரிவிக்கின்றன. |
|
|
|
| Sponsor |  | | Advertisements |
| கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ] |
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்] |
| ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ] |
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்] |
| ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ] |
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம் |
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] [ ] |
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்] |
| இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி |
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] [ ] |
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்] |
| இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது? |
| [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ] |
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்] |
|
|