|
|
|
|
| மஹிந்தவின் சகோதரி நிரூபமாவுக்கு இராமேஸ்வரத்தில் கறுப்புக்கொடி (வீடியோ இணைப்பு) |
| [ திங்கட்கிழமை, 09 நவம்பர் 2009, 04:22.39 PM GMT +05:30 ] |
ராமேஸ்வரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே உறவினருக்கு ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் சார்பில் கறுப்புகொடி காட்டப்பட்டது. |
|
ராஜபக்சே சகோதரி நிருபமா ராஜபக்சே, அவரது கணவர் குமரேசன் நடராஜனுடன் நேற்று ராமேஸ்வரம் வந்தார். நேற்று இரவு ராயல் பார்க் என்னும் ஹோட்டலில் தங்கிய இவர்களுக்கு மாவட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு கொடுத்துள்ளனர். ராஜபக்சே சகோதரி வருகை ரகசியமாக வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நிருபமா ராஜபக்சே, அவரது கணவர் குமரேசன் நடராஜனுடன் கண்டலூர் செட்டியார் மண்டபத்தில் பூஜை செய்தார். ராஜபக்சே சகோதரி வருகை குறித்து அறிந்த செய்தியாளர்கள் ராமேஸ்வரம் விரைந்தனர். அப்போது குமரேசன் நடராஜனிடம், பொதுவாக ராமேஸ்வரத்துக்கு பாவம் கழிக்கத்தான் அனைவரும் வருவார்கள். நீங்களும் பாவத்தை கழிக்கத்தான் வருகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இந்த கேள்விக்கு கோபம் அடைந்த குமரேசன் நடராஜன், என்ன இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு மற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சென்று விட்டார். ராஜபக்சே சகோதரி நிருபமா ராஜபக்சே, அவரது கணவர் குமரேசன் நடராஜன் வருகைக்கு, சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் உள்பட ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்கள் பலர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வர மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டிருக்கும் இந்நேரத்தில் ராஜபக்சே சகோதரி வருகை முன்கூட்டியே தெரிந்திருந்தால், மிகப்பெரிய போராட்டமாக வெடித்திருக்கும் என்று மீனவ அமைப்புகள் தெரிவிக்கின்றன. |
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|