One moment please..
 
செய்தி
பாக்கு நீரிணை கடல் பகுதியில் இலங்கை கடற்படை ரோந்து அதிகரிப்பு: இராமேசுவரம் மீனவர்கள் தகவல்
[ வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 01:17.35 PM GMT +05:30 ]
பாக்கு நீரிணை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் 20 போர் கப்பல்களில் ரோந்து சுற்றி வந்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர் என்று இராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

இராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் மீனவர்கள் விசைப்படகுகளில் இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்து வருகின்றனர்.

கடந்த ஜூன் முதல் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியும், படகுகளைச் சேதப்படுத்தியும், மீன்களைப் பறித்தும் செல்கின்றனர்.

மேலும் இலங்கை கப்பல்களில் சீனாவைச் சேர்ந்த கடற்படை வீரர்களும் உள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பாக் நீரிணைப்பு கடலில் இலங்கைக் கடற்படையினர் தங்கள் வலிமையை நிலைநாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:

இராமேசுவரத்தில் நவம்பர் 4-ம் தேதி 400 விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. இந்தப் படகுகள் நடுக்கடலில் வலையை வீசியபோது அங்கு இலங்கை கடற்படையின் 20 போர் கப்பல்கள் ரோந்து வந்தன.

முன்பெல்லாம் 5 முதல் 8 கப்பல்களில்தான் ரோந்து சுற்றி வருவர். தற்போது கூடுதலான கப்பல்களுடன் ரோந்து வந்து எங்களை விரட்டியடித்தனர். நாங்கள் மீன்பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம்.

மீன் வளம் அதிகம் உள்ள பாக்கு நீரிணை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் ஆதிக்கம் செலுத்துவதால், தமிழக மீனவக் குடும்பங்கள்,தொழிலாளர்கள் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்