One moment please..
 
செய்தி
தமிழர்கள் வாழ்வில் என்றும் மறக்கமுடியாத, மகத்தான நவம்பர் மாதம்: கனடா உதயன்
[ வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 03:32.05 PM GMT +05:30 ]
எம்மவர்கள் கலங்கிப் போயுள்ளனர். எதைச் செய்யலாம், எதைச் செய்யாமல் தவிர்க்கலாம் என்பது தெரியாமல் தவிக்கின்றனர். இவ்வாறான ஒரு நேரத்தில் தான் மகத்தான நவம்பர் மாதம் பிறந்திருக்கின்றது. இவ்வாறு கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் இதழ் தமது ஆசிரியர் தலையங்கத்தில்  குறிப்பிட்டுள்ளது.

உதயன் ஆசிரியர் தலையங்கத்தில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வெற்றிகளின் சின்னமாய் விளங்கிய அந்த வன்னி மண் சின்னா பின்னமாய் ஆகிவிட்ட நிலையில், விடுதலை வேட்கையின் வித்துக்கள் முளைத்த அந்த மண் இன்று எதிரிகளின் காலடிக்குள் வீழ்ந்து இடர்ப்படுகின்ற வேளையில் மானமுள்ள நமது மக்கள் உள்ளம் வெதும்பி நிற்கின்றனர். 

ஆனால் எதிரிகளோ கொக்கரிக்கின்றனர். கொலை வெறி கொண்டவர்கள் இன்னும் அடங்கியதாகவும் தெரியவில்லை. குருதியின் வாடை இன்னும் அந்த மண்ணில் வீசுகின்றது. சீருடைக்காரச் சிங்களப் படைகள் அந்த மண்ணை ஆக்கிரமித்து அட்டகாசம் செய்கின்றனர்.

இவ்வாறான ஒரு நேரத்தில் தான் மகத்தான நவம்பர் மாதம் பிறந்திருக்கின்றது.

நவம்பர் மாதமென்பது ஒரு மகத்தான மாதம் என்பதை நாம் இந்தப் பக்கங்களில் வருடக்கணக்காக எழுதிக் கொண்டே வந்தோம். இன்று மட்டும் அதை எப்படி மறுப்பது. அல்லது மறப்பது?. நமது ஈழத்தமிழர்களுக்கு சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டும்.

அந்த மக்கள் தமது சுயநிர்ணய உரிமைகளை பெற்றவர்களாய் தங்கள் சொந்த மண்ணில் வாழ வேண்டும். அதை சிங்கள தேசத்திடமிருந்து வாய்களால் கேட்டு வாங்கிவிட முடியாது.

அதைப் போராடித்தான் பெறவேண்டும் என்ற நம்பிக்கைகளோடு போராடப் புறப்பட்ட அந்த பிரபாகரன் என்னும் வீரத்தமிழத் தலைவன் பிறந்த மாதம் இந்த மகத்தான நவம்பர்தான்.

அதே மாதத்தில் தான் இந்த மாவீரர் பற்றிய நினைவெழுச்சி நிகழ்வுகளும் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வந்தன. அந்த வீரத் தலைவனையும் மாவீரர்களையும் நாம் ஏன் மறந்து விட வேண்டும்.

மற்றவர்களைப் போல அவர்களின் பெருமைகளையும் தியாகங்களையும் மறந்து விட்டு எங்களால் எப்படி நமது தினசரி கடமைகளைச் செய்ய முடியும். என்ற கேள்விகளை உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் மனச்சாட்சியிடம் ஒரு தடவை கேட்டுப் பார்க்க வேண்டும்.

வெற்றிகள் பலவற்றை முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் அடைந்த போது சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தவர்கள். அந்த வீரர்களுக்காக நிதியை வாரி வாரி வழங்கியவர்கள் ஏன் தோல்வி ஏற்பட்ட போது மட்டும் துவண்டு விட வேண்டும்.? கருத்துக்களைச் சொல்ல அஞ்ச வேண்டும்? என்ற வினாக்களைத் தான் நாம் இங்கே முன்வைக்க விரும்புகின்றோம்.

நமது மாவீரர்களின் தியாகங்கள் நாம் எப்போதும் மறக்க முடியாதவை. உலகில் தோற்றுவிக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள் பலவும் பல நோக்கங்கள் கொண்டவைகளாக இருந்தன. ஆனால் நமது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் சர்வதேசத்தால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு உலகம் வியப்படையும் வண்ணம் இருந்தது என்பதை நாம் மறந்து விட முடியாது.

ஆதலினால் தான் சர்வதேசம் என்ற பயங்கரவாதக் கூட்டு உன்னதமான அந்த விடுதலை இயக்கத்தை பூண்டோடு அழிக்க தமது கைகளைக் கோர்த்துக் கொண்டது. தங்களுக்குள் இருந்த வேற்றுமைகளை தற்காலிமாக தவிர்த்து விட்டு அவர்கள் விடுதலைப் புலிகளை அழிக்கத் துணிந்தனர்.

எவ்வாறான தோல்விகளும் பின்னடைவுகளும் நமது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஏற்பட்டாலும் அந்த மாவீரர்களின் தியாகங்கள் மறக்கப்படக் கூடியவை அல்ல. அந்த உன்னத உயிர்த்தியாகங்களை நாம் நம்மால் முடிந்த வகையில் மரியாதை செய்து வணங்க வேண்டும்.

வாய்களால் எதுவும் பேச முடியாத சூழ்நிலை இருக்குமானால் மனதிற்குள் நினையுங்கள். எழுத்தில் வடித்து பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள முடியாவிட்டால் மனதில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அந்த தியாகத்தின் பெருமைகளை.

இந்த வாசகங்களையே நாம் இந்த மகத்தான மாதத்தில் நமது மக்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்புகின்றோம்.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்