Switch to
   
   
   
செய்தி
பாதுகாப்புத் தேடி கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த மக்களை அரவணைத்த அரசை அவர்கள் மறக்கக் கூடாது என்கிறார் பசில்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 02:34.39 AM GMT +05:30 ]
புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து பாதுகாப்புத் தேடி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்த மக்களை எமது ஜனாதிபதி தலைமையிலான அரசு வரவேற்று அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியதனை அவர்கள் மறந்து விடக் கூடாதென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வவுனியா, செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நலன்குறித்த ஜனாதிபதியின் விசேட அறிவிப்பொன்றை விடுக்கும் நிகழ்வு நேற்று வவுனியாவில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகக் கூறிய பசில் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது,

தற்போது மீள்குடியமரும் மக்களுக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு 50 ஆயிரம் ரூபாவாக டிசெம்பர் 15 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும்.

வன்னியில் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து அரசாங்கத்தின் பாதுகாப்பை தேடி வந்த மக்களுக்கு எமது ஜனாதிபதி தலைமையிலான அரசும், பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளும் முழுமனதுடன் அவர்களை வரவேற்று சகல வசதிகளையும் செய்துள்ளதை இம்மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

ஆரம்பத்தில் இரண்டு இலட்சத்து எண்பதாயிரமாக இருந்த நிவாரணக் கிராமங்களில் வசித்த மக்களது தொகை இன்று வெகுவாகக் குறைந்துள்ளது. இதற்கு அரசின் நேர்மையான, தூய்மையான மீள்குடியேற்றக் கொள்கையே காரணமாகும்.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களை மிகவும் துரிதமாகவும் நாம் மீள் குடியேற்றினோம்.

இன்றும் பல நாடுகளில் அகதி முகாம்கள் பல வருடங்களாகக் காணப்படுகின்றன. அம் மக்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களில் வசிக்கின்றனர். ஆனால் எமது நாட்டில் அகதிகள் இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்தி வருகின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அனர்த்த சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மீன்பிடி வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.






செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் : சரத் பொன்சேகா
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:33.42 PM ]
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். [மேலும்]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்!
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:39.22 PM ]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புப் போர் தொடர்கின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காகத் தமிழீழ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயிர் வாழும் சலுகை தற்போது மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:08.13 PM ]
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். [மேலும்]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:37.56 AM ]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். [மேலும்]
விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்றம் அனுமதி
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:10.19 AM ]
இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான.... [மேலும்]
புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 07:04.31 AM ]
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது.......... [மேலும்]
விளம்பரம்