Switch to
   
   
   
செய்தி
பாதுகாப்புத் தேடி கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த மக்களை அரவணைத்த அரசை அவர்கள் மறக்கக் கூடாது என்கிறார் பசில்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 02:34.39 AM GMT +05:30 ]
புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து பாதுகாப்புத் தேடி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்த மக்களை எமது ஜனாதிபதி தலைமையிலான அரசு வரவேற்று அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியதனை அவர்கள் மறந்து விடக் கூடாதென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வவுனியா, செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நலன்குறித்த ஜனாதிபதியின் விசேட அறிவிப்பொன்றை விடுக்கும் நிகழ்வு நேற்று வவுனியாவில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகக் கூறிய பசில் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது,

தற்போது மீள்குடியமரும் மக்களுக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு 50 ஆயிரம் ரூபாவாக டிசெம்பர் 15 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும்.

வன்னியில் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து அரசாங்கத்தின் பாதுகாப்பை தேடி வந்த மக்களுக்கு எமது ஜனாதிபதி தலைமையிலான அரசும், பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளும் முழுமனதுடன் அவர்களை வரவேற்று சகல வசதிகளையும் செய்துள்ளதை இம்மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

ஆரம்பத்தில் இரண்டு இலட்சத்து எண்பதாயிரமாக இருந்த நிவாரணக் கிராமங்களில் வசித்த மக்களது தொகை இன்று வெகுவாகக் குறைந்துள்ளது. இதற்கு அரசின் நேர்மையான, தூய்மையான மீள்குடியேற்றக் கொள்கையே காரணமாகும்.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களை மிகவும் துரிதமாகவும் நாம் மீள் குடியேற்றினோம்.

இன்றும் பல நாடுகளில் அகதி முகாம்கள் பல வருடங்களாகக் காணப்படுகின்றன. அம் மக்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களில் வசிக்கின்றனர். ஆனால் எமது நாட்டில் அகதிகள் இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்தி வருகின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அனர்த்த சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மீன்பிடி வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.





பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement