Switch to
   
   
   
செய்தி
  • Photo
பிரபாவின் படங்களை கிழித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு: சீமான் ஆதரவாளர்கள் 3 பேர் கைது
[ சனிக்கிழமை, 28 நவம்பர் 2009, 03:28.55 PM GMT +05:30 ]
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி ஈரோட்டில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர்  இயக்கத்தினர் வைத்திருந்த பிரபாகரனின் படங்களை இளங்கோவன் தலைமையில் சென்ற காங்கிரஸ் குழுவினர் கிழித்தெறிந்ததையடுத்து அன்று இரவு 12 மணியளவில் இளங்கோவன் வீட்டின் மீது 3 பெற்றோல் குண்டு வீசப்பட்டது.

இது பற்றி தெரியவருவதாவது:-

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி ஈரோட்டில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர்  இயக்கத்தினர் மற்றும் ஜவுளித் தொழிலாளர்கள் சார்பில் பிரபாகரனின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் இளங்கோவன் தலைமையில் அவ்விடத்திற்குச் சென்ற காங்கிரஸ் கட்சியினர் பேனர்களை கிழித்து எறிந்தனர்.

மேலும் பிரபாகரனின் பேனர்கள் வைத்தவர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இச்சம்பவத்தையடுத்து நேற்று முன்தினம் இளங்கோவன் குடும்பத்தினருடன் ஈரோட்டில் உள்ள வீட்டுக்கு சென்றார். சென்னை வீட்டில் காவலாளி மோசஸ் மட்டுமே இருந்தார்.

நேற்றிரவு 11.30 மணிக்கு காவலாளி மோசஸ் முன்பக்க கதவை பூட்டிவிட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவு 12 மணி அளவில் இளங்கோவன் வீட்டுக்கு 3 மர்ம மனிதர்கள் சென்று வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினார்கள்.

அது வீட்டு முன்பக்க அறை வாசலில் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்தது. அங்கு போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் தீ பிடித்து எரிந்தன. நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.

சத்தம் கேட்டு காவலாளி மோசஸ் முன் பக்க கதவை திறந்து பார்த்தார். அப்போது மர்ம மனிதர்கள் மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.

இதுபற்றி ஈரோட்டில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு காவலாளி மோசஸ் தகவல் கொடுத்தார். பிறகு அடையார் பொலிஸ் நிலையத்திலும் புகார் செய்தார்.

அடையார் பொலிஸார் விரைந்து சென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். பிறகு மர்ம நபர்கள் குறித்து 50 க்கும் மேற்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையின் பின்னர் பொலிஸார், சீமானின் உதவியாளரும் டைரக்டருமான மித்ரன், அருண், மணி என்ற நாம் தமிழர் இயக்க உறுப்பினர்கள் மூவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் : சரத் பொன்சேகா
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:33.42 PM ]
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். [மேலும்]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்!
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:39.22 PM ]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புப் போர் தொடர்கின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காகத் தமிழீழ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயிர் வாழும் சலுகை தற்போது மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:08.13 PM ]
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். [மேலும்]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:37.56 AM ]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். [மேலும்]
விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்றம் அனுமதி
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:10.19 AM ]
இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான.... [மேலும்]
புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 07:04.31 AM ]
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது.......... [மேலும்]
விளம்பரம்