Switch to
   
   
   
செய்தி
(2ம் இணைப்பு)
அரசாங்கத்துடன் இணைந்தால் பிரதமராக்குவதாக எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு உறுதிமொழி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 02:58.00 AM GMT +05:30 ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்கவை, அரசாங்க கட்சிக்குள் இணைத்துக்கொள்ள பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதற்காக பல்வேறு மட்டத்திலும் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு ஆசை வார்த்தைகள் கூறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் அரசாங்கத்துடன் இணைந்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்றால் அடுத்து வரும் அரசாங்கத்தில் பிரதமமந்திரி பதவி வழங்கப்படும் என்ற உறுதியும் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தாம் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகப்போவதில்லை என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள பலர் தம்மை சந்தித்து பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஐக்கிய தேசியக்கட்சியை விட்டு தாம் விலகப்போவதில்லை எனக்குறிப்பிட்ட அவர், தாம் எதிர்காலத்தில் பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் எஸ்.பி. திஸாநாயக்க கடந்த 19 ஆம் திகதி எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

எஸ.பி. திஸாநாயக்கவை ஐ.தே.க. சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அம் முயற்சி கைகூடாததன் காரணமாக அவர் ஐ.தே.க. மீது கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளதை  நினைத்து அரசுத்தரப்பினர் அதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி திஸாநாயக்க ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுடன் சில காலத்திற்கு பேசாமல் இருக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எஸ்.பி திஸாநாயக்கவிற்கு வழங்கப்படவுள்ள அமைச்சர் பதவி மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
கட்சி மாறுவது தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே எஸ்.பி ஐக்கிய தேசியக் கட்சியைவிட்டு விலகுவதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement