Switch to
   
   
   
செய்தி
(2ம் இணைப்பு)
அரசாங்கத்துடன் இணைந்தால் பிரதமராக்குவதாக எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு உறுதிமொழி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 02:58.00 AM GMT +05:30 ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்கவை, அரசாங்க கட்சிக்குள் இணைத்துக்கொள்ள பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதற்காக பல்வேறு மட்டத்திலும் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு ஆசை வார்த்தைகள் கூறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் அரசாங்கத்துடன் இணைந்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்றால் அடுத்து வரும் அரசாங்கத்தில் பிரதமமந்திரி பதவி வழங்கப்படும் என்ற உறுதியும் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தாம் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகப்போவதில்லை என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள பலர் தம்மை சந்தித்து பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஐக்கிய தேசியக்கட்சியை விட்டு தாம் விலகப்போவதில்லை எனக்குறிப்பிட்ட அவர், தாம் எதிர்காலத்தில் பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் எஸ்.பி. திஸாநாயக்க கடந்த 19 ஆம் திகதி எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

எஸ.பி. திஸாநாயக்கவை ஐ.தே.க. சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அம் முயற்சி கைகூடாததன் காரணமாக அவர் ஐ.தே.க. மீது கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளதை  நினைத்து அரசுத்தரப்பினர் அதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி திஸாநாயக்க ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுடன் சில காலத்திற்கு பேசாமல் இருக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எஸ்.பி திஸாநாயக்கவிற்கு வழங்கப்படவுள்ள அமைச்சர் பதவி மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
கட்சி மாறுவது தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே எஸ்.பி ஐக்கிய தேசியக் கட்சியைவிட்டு விலகுவதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் : சரத் பொன்சேகா
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:33.42 PM ]
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். [மேலும்]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்!
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:39.22 PM ]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புப் போர் தொடர்கின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காகத் தமிழீழ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயிர் வாழும் சலுகை தற்போது மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:08.13 PM ]
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். [மேலும்]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:37.56 AM ]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். [மேலும்]
விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்றம் அனுமதி
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:10.19 AM ]
இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான.... [மேலும்]
புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 07:04.31 AM ]
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது.......... [மேலும்]
விளம்பரம்