Switch to
   
   
   
செய்தி
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இரு தரப்பிலும் கட்சித் தாவல்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 04:43.46 AM GMT +05:30 ]
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு கட்சிகளிலும் கட்சித் தாவல்களை எதிர்பார்க்க முடியும் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கும் தாவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
கட்சித் தாவல்களுடன் தொடர்புடைய நபர்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதித் தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கு தாவும் உறுப்பினர்களுடனான இணைப்பு நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, மற்றும் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
ஆளும் கட்சியின் பத்து முக்கிய அமைச்சர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட 30 பேர் எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மிக முக்கியமான செயற்பாட்டாளர் ஒருவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement