|
|
|
| ஏனைய இராணுவத் தளபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தமக்கு வழங்கப்படவில்லை: சரத் பொன்சேகா |
| [ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 03:47.58 AM GMT +05:30 ] |
கடந்த காலங்களில் இராணுவத் தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய நபர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தமக்கு வழங்கப்படவில்லை என ஜெனரல் சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய நேர் காணலில் தெரிவித்துள்ளார். |
உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறுவதற்கு ஒரு வார கால அவகாசமே வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதிகளாக கடமையாற்றிய டொனால்ட் பெரேரா மற்றும் சாந்த கோட்டேகொட ஆகியோர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் மூன்றரை மாதங்கள் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதில் சிக்கல்கள் இல்லை எனவும், வேறு இடமொன்றை தேடிக் கொள்வதற்கான கால அவகாசத்தையே தாம் கோரியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து திடீரென வெளியேறுமாறு கோரியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பாதுகாப்பு அமைச்சு தோல்வியடைந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளீர்களாக என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, சில வேளைகளில் சட்டத்தின் உதவியை நாடக் கூடும் என அவர் பதிலளித்துள்ளார்.
கடந்த ஒரு வார காலமாக தங்குவதற்கு உசிதமான வீடு ஒன்றை தாம் தேடியதாகவும், சில வீடுகள் உசிதமான வகையில் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இறுதி நேரத்தில் வீட்டு உரிமையாளர்கள் தமக்கு வீடுகளை வழங்க மறுப்பு தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் அழுத்தம் காரணமாக குறித்த வீட்டு உரிமையாளர்கள் தமக்கு வீடுகளை வழங்க மறுப்புத் தெரிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
றோயல் கல்லூரிக்கு அருகாமையில் வீடொன்றை தாம் பார்ப்பதாகவும் அந்தப் பிரதேசத்தில் அரசியல் அலுவலகமொன்றை திறக்கவும் தாம் உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
40 ஆண்டுகளாக தாம் இராணுவத்திற்காக வழங்கிய சேவைக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர்ந்த வேறும் நபர்களினாலும் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு 25 பேர் வரை குறைக்கப்பட்டதாகவும், எதிர்ப்பு வெளியிட்டதனைத் தொடர்ந்து அந்த எண்ணிக்கை 60 ஆக உயர்த்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் அதிருப்தி வெளியிட்டதனைத் தொடர்ந்து 12 கமாண்டோக்களை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் தமக்கு விருப்பமானவர்கள் அல்ல எனவும், பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில வேளைகளில் குறித்த பாதுகாப்பு அதிகாரிகளினாலேயே தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவப் படையின் இரண்டாம் நிலை வகிக்கும் நபருக்கு தம்மைவிடவும் அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தற்போது நீங்கள் ஓர் பொதுமகன் என ஜனாதிபதி பதிலளித்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது மனைவினால் உருவாக்கப்பட்ட படைவீரர் பாடசாலை ஒன்றின் பெயர்ப் பலகையில் தமது பெயர் காணப்பட்ட காரணத்தினால் பாடசாலை அங்குரார்ப்பண வைபவம் ஒத்தி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பெயர்கள் அகற்றப்பட்டு வேறும் பெயர்கள் பொறிக்கப்படக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் |
|
|
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்! |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ] |
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்] |
| யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ] |
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்] |
| இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ] |
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] [ ] |
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] [ ] |
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| advertisement |
|
|