Switch to
   
   
   
செய்தி
ஏனைய இராணுவத் தளபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தமக்கு வழங்கப்படவில்லை: சரத் பொன்சேகா
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 03:47.58 AM GMT +05:30 ]
கடந்த காலங்களில் இராணுவத் தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய நபர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தமக்கு வழங்கப்படவில்லை என ஜெனரல் சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய நேர் காணலில் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறுவதற்கு ஒரு வார கால அவகாசமே வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதிகளாக கடமையாற்றிய டொனால்ட் பெரேரா மற்றும் சாந்த கோட்டேகொட ஆகியோர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் மூன்றரை மாதங்கள் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதில் சிக்கல்கள் இல்லை எனவும், வேறு இடமொன்றை தேடிக் கொள்வதற்கான கால அவகாசத்தையே தாம் கோரியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து திடீரென வெளியேறுமாறு கோரியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பாதுகாப்பு அமைச்சு தோல்வியடைந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளீர்களாக என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, சில வேளைகளில் சட்டத்தின் உதவியை நாடக் கூடும் என அவர் பதிலளித்துள்ளார்.

கடந்த ஒரு வார காலமாக தங்குவதற்கு உசிதமான வீடு ஒன்றை தாம் தேடியதாகவும், சில வீடுகள் உசிதமான வகையில் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இறுதி நேரத்தில் வீட்டு உரிமையாளர்கள் தமக்கு வீடுகளை வழங்க மறுப்பு தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் அழுத்தம் காரணமாக குறித்த வீட்டு உரிமையாளர்கள் தமக்கு வீடுகளை வழங்க மறுப்புத் தெரிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

றோயல் கல்லூரிக்கு அருகாமையில் வீடொன்றை தாம் பார்ப்பதாகவும் அந்தப் பிரதேசத்தில் அரசியல் அலுவலகமொன்றை திறக்கவும் தாம் உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

40 ஆண்டுகளாக தாம் இராணுவத்திற்காக வழங்கிய சேவைக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர்ந்த வேறும் நபர்களினாலும் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு 25 பேர் வரை குறைக்கப்பட்டதாகவும், எதிர்ப்பு வெளியிட்டதனைத் தொடர்ந்து அந்த எண்ணிக்கை 60 ஆக உயர்த்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் அதிருப்தி வெளியிட்டதனைத் தொடர்ந்து 12 கமாண்டோக்களை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் தமக்கு விருப்பமானவர்கள் அல்ல எனவும், பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில வேளைகளில் குறித்த பாதுகாப்பு அதிகாரிகளினாலேயே தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவப் படையின் இரண்டாம் நிலை வகிக்கும் நபருக்கு தம்மைவிடவும் அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தற்போது நீங்கள் ஓர் பொதுமகன் என ஜனாதிபதி பதிலளித்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது மனைவினால் உருவாக்கப்பட்ட படைவீரர் பாடசாலை ஒன்றின் பெயர்ப் பலகையில் தமது பெயர் காணப்பட்ட காரணத்தினால் பாடசாலை அங்குரார்ப்பண வைபவம் ஒத்தி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெயர்கள் அகற்றப்பட்டு வேறும் பெயர்கள் பொறிக்கப்படக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் : சரத் பொன்சேகா
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:33.42 PM ]
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். [மேலும்]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்!
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:39.22 PM ]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புப் போர் தொடர்கின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காகத் தமிழீழ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயிர் வாழும் சலுகை தற்போது மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:08.13 PM ]
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். [மேலும்]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:37.56 AM ]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். [மேலும்]
விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்றம் அனுமதி
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:10.19 AM ]
இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான.... [மேலும்]
புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 07:04.31 AM ]
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது.......... [மேலும்]
விளம்பரம்