இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்ததாவது:-
வடகொழும்பு ஐ.தே.க. அமைப்பாளராக அண்மையில் கட்சித் தலைமையகத்தால் நியமிக்கப்பட்ட எனக்கு நேற்று மாலை மாதம்பிட்டிய சன சமூக நிலையத்துக்கருகில் வரவேற்பு வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக நான் நேற்றுப் பிற்பகல் சுமார் 3 மணியளவில் சென்ற சமயம் மேடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அத்துடன் நான் மேடையில் பேச எழுந்ததும், இனந் தெரியாத ஒரு குழுவினர் கூச்சலிடத் தொடங்கினர்.
இதையும் பொருட்படுத்தாது நான் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அக்குழுவினர் மேடையின் மீது கல் வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
குழப்பவாதிகள் கூச்சலிட்டும் கல் வீச்சுத் தாக்குதல்களை நடத்தியும் எமது கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால் நாம் எமது கட்சியைச் சேர்ந்த சகோதரர்களும் கூட்டத்தை தொடர்ந்து மாலைவரை நடத்தினோம்.
இக் கூட்டத்தைக் குழப்ப முயன்ற கும்பல்கள் யாரென்பது பற்றி இதுவரை தெயாது. எனினும் ஒன்றை மட்டும் கூறுகிறேன். ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் அதிகரித்துள்ளதை சகிக்க முடியாத ஒரு சிலரினாலேயே இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஆரம்ப கட்டத்திலேயே நாம் இவ்வாறு அச்சுறுத்தப்படுகின்றோமென்றால் எதிர்வரும் தேர்தலில் முகம் கொடுப்பதற்கு அவர்கள் அச்சப்பட்டிருப்பதாகவே அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது என்றார்.
|