Switch to
   
   
   
செய்தி
ஐ.தே.க.வின் கூட்டத்திற்கு கல்வீச்சு; கூச்சலிட்டு குழப்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 02:08.18 AM GMT +05:30 ]
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், வட கொழும்பு ஐ.தே.க. அமைப்பாளருமான ரவி கருணாநாயக்கவின் கூட்டத்தில் இனந்தெரியாத குழுவொன்றினால் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்த முயன்றதாகவும் தெவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்ததாவது:-

வடகொழும்பு ஐ.தே.க. அமைப்பாளராக அண்மையில் கட்சித் தலைமையகத்தால் நியமிக்கப்பட்ட எனக்கு நேற்று மாலை மாதம்பிட்டிய சன சமூக நிலையத்துக்கருகில் வரவேற்பு வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக நான் நேற்றுப் பிற்பகல் சுமார் 3 மணியளவில் சென்ற சமயம் மேடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அத்துடன் நான் மேடையில் பேச எழுந்ததும், இனந் தெரியாத ஒரு குழுவினர் கூச்சலிடத் தொடங்கினர்.

இதையும் பொருட்படுத்தாது நான் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அக்குழுவினர் மேடையின் மீது கல் வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

குழப்பவாதிகள் கூச்சலிட்டும் கல் வீச்சுத் தாக்குதல்களை நடத்தியும் எமது கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால் நாம் எமது கட்சியைச் சேர்ந்த சகோதரர்களும் கூட்டத்தை தொடர்ந்து மாலைவரை நடத்தினோம்.

இக் கூட்டத்தைக் குழப்ப முயன்ற கும்பல்கள் யாரென்பது பற்றி இதுவரை தெயாது. எனினும் ஒன்றை மட்டும் கூறுகிறேன். ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் அதிகரித்துள்ளதை சகிக்க முடியாத ஒரு சிலரினாலேயே இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஆரம்ப கட்டத்திலேயே நாம் இவ்வாறு அச்சுறுத்தப்படுகின்றோமென்றால் எதிர்வரும் தேர்தலில் முகம் கொடுப்பதற்கு அவர்கள் அச்சப்பட்டிருப்பதாகவே அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது என்றார்.
 
   
 
 

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement