Switch to
   
   
   
செய்தி
ஓசியானிக் வைக்கிங் கப்பல் அகதிகளை மீள்குடியேற்ற நோர்வேயும் நியூஸிலாந்தும் இணக்கம்
[ வியாழக்கிழமை, 17 டிசெம்பர் 2009, 04:34.06 PM GMT +05:30 ]
ஓசியானிக் வைக்கிங் கப்பலின் மூலம் இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து காப்பாற்றப்பட்ட 78 இலங்கையர்களில் சிலரை பொறுப்பேற்க நோர்வேயும் நியூஸிலாந்தும் இணக்கம் வெளியிட்டுள்ளன.

இந்த அகதிகள்   கடந்த ஒக்டோபர் மாதத்தில் காப்பாற்றப்பட்டு இந்தோனேசியாவின் தான்ஜூங் பின்நாங் துறைமுகத்தில் அழைத்து வரப்பட்ட போதும் தரித்திருந்த கப்பலி;ல் இருந்து வெளியேற மறுத்துவந்தனர்.

இதனையடுத்து 4 முதல் 6 வாரங்களுக்குள் மீள்குடியமர்த்தப்படுவர் என்ற உறுதிமொழியை அடுத்தே அவர்கள் கப்பலில் இருந்து இறங்கினர். தற்போது இந்தோனிசியாவில் முகாமி;ல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். .

இந்தநிலையில் இவர்களில் மூவரை பொறுப்பேற்க தாம் தயார் என நோர்வே அறிவித்துள்ளது. அதேபோல நியூஸிலாந்தும் அகதிகள் சிலரை பொறுப்பேற்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் மேலதிக அகதிகளை பொறுப்பேற்க முன்வரலாம் என எதிர்ப்பார்ப்பதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இந்த அகதிகளை பொறுப்பேற்பது தொடர்பில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் பேரவையின் அகதிகள் தெரிவு நடைமுறை பின்பற்றப்படுமானால், தாம் அகதிகளை பொறுப்பேற்க தயார் என நியூஸிலாந்து அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமமந்திரி கெவின் ரூட் மற்றும் நியூஸிலாந்து பிரதம மந்திரி ஜோன் கே ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையிலேயே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது. நோர்வேயை பொறுத்த வரை அந்த நாடு நோர்வேயில் உறவுகளை கொண்ட மூன்று அகதிகளை பொறுப்பேற்க இணங்கியுள்ளது. 
 

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement