|
|
|
| Photo
|
|
| வடகொரிய ஆயுத விமானம் இலங்கையை நோக்கியே பயணித்தது : தாய்லாந்து பொலிஸார் |
| [ புதன்கிழமை, 23 டிசெம்பர் 2009, 06:13.27 PM GMT +05:30 ] | |
வடகொரியாவில் இருந்து ஆயுதங்களுடன் கடந்த வாரம் புறப்பட்ட விமானம் இறுதியாக இலங்கையை நோக்கியே சென்றதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
இந்த விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக தாய்லாந்தில் தரித்த போது அதில் ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த விமானம் தடுத்து வைக்கப்பட்டதுடன், அதில் பயணித்த ஐந்து விமானிகளும் கைது செய்யப்பட்டனர். எனினும் இந்த விமானிகள், தமக்கும் சர்வதேச ஆயுதக்கடத்தல்காரர் விக்டர் பௌட்டுக்கும் தொடர்புகள் இல்லை என தெரிவித்துள்ளனர்.
விக்டர் பௌட்டும் குறித்த விமானிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் நால்வர் கஸகஸ்தானையும் ஒருவர் பெலாரஸ்ஸையும் சேர்ந்தவர்களாவர். இதேவேளை, இந்த விமானம் ஈரானை நோக்கி சென்றதாக கூறப்பட்ட தகவலில் உண்மையில்லை என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஆயுத கடத்தல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, குறித்த விமானம், ஈரானின் தெஹ்ரான், பாங்கொக், மற்றும் கொழும்பு, அஸர்பஜான்,உக்ரெய்ன் ஆகிய இடங்களில் தரித்து செல்ல வாய்ப்புகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது..


|
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|