அகதிகள் படகில் எஞ்சியுள்ளவர்களையும் நோய் தொற்று தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாக இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எட்டு இலங்கை அகதிகள் மாத்திரமே தமக்கு மருத்துவ சோதனைகளை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அவர்கள் அகதிகளுக்கான கோரிக்கை விடுத்து தங்கியுள்ள நிலையில், அவர்களின் விடயங்களை இந்தோனேசிய கடற்படையினர் கையாள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவை அல்லது, சர்வதேச அகதிகள் பராமரிப்பகத்தின் ஊடாக மாத்திரமே இந்த விடயங்களை கையாளலாம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே குறித்த இலங்கை அதிகள் மீது, இந்தோனேசிய கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. |