Switch to
   
   
   
செய்தி
எதிர்வரும் தேர்தல் கண்காணிப்பாளராக ஐ. ஒன்றியப் பிரதிநிதிகள் செயலாற்ற தடை: அரசாங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 03:56.08 AM GMT +05:30 ]
எதிர்வரும் தேர்தல்களில் கண்காணிப்பாளர்களாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி நிதிகளை செயலாற்ற அழைப்பதில்லை என்று அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக விடய மறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக அந்த அமைப்பு கடைப்பிடித்து வரும் கொள்கை காரணமாக அமைப்பின் பிரதிநிதிகளை அழைப்பதில்லை என்று அரசு உத்தேசித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

எதிர்வரும் தேர்தலில் கண்காணிப்பாளராக ஐரோப்பிய ஒன்றியத்தை இலங்கை ஏற்றுக்கொள்ள மறுக்குமானால் அது பாரிய பிரச்சினையை தோற்றுவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகிறது. இந்தநிலையில் எதிர்வரும் தேர்தல்களின் போது ஐரோப்பிய ஒன்றியத்தை கண்காணிப்பாளராக அனுமதிப்பதில்லை என்ற நகர்வு அரசாங்கத்தரப்பில் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது உண்மையான தகவலாக இருக்குமானால், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவில் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் உள்ளுர் தேர்தல் கண்காணிப்பாளர்களும் இது தொடர்பில் தமது கவனத்தை செலுத்தியுள்ளனர். இது பாரிய தேர்தல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனவே, தேர்தல்கள் ஆணையாளர் உரிய நேரத்தில் உரிய முடிவை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை, 1989 ஆம் ஆண்டுக்கு பின்னர் வன்னியில் உள்ள வாக்காளர்கள் தமது பதிவுகளை புதுப்பித்துக் கொள்ளாமையால், இந்தமுறை தேர்தல் வாக்களிப்பின் போது நடைமுறைப் பிரச்சினைகள் எதிர்நோக்கப்படும் என தேர்தல்கள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அதாவது பெரும்பாலான இளைஞர் யுவதிகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் போகக்கூடிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement