Switch to
   
   
   
செய்தி
எதிர்வரும் தேர்தல் கண்காணிப்பாளராக ஐ. ஒன்றியப் பிரதிநிதிகள் செயலாற்ற தடை: அரசாங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 03:56.08 AM GMT +05:30 ]
எதிர்வரும் தேர்தல்களில் கண்காணிப்பாளர்களாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி நிதிகளை செயலாற்ற அழைப்பதில்லை என்று அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக விடய மறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக அந்த அமைப்பு கடைப்பிடித்து வரும் கொள்கை காரணமாக அமைப்பின் பிரதிநிதிகளை அழைப்பதில்லை என்று அரசு உத்தேசித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

எதிர்வரும் தேர்தலில் கண்காணிப்பாளராக ஐரோப்பிய ஒன்றியத்தை இலங்கை ஏற்றுக்கொள்ள மறுக்குமானால் அது பாரிய பிரச்சினையை தோற்றுவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகிறது. இந்தநிலையில் எதிர்வரும் தேர்தல்களின் போது ஐரோப்பிய ஒன்றியத்தை கண்காணிப்பாளராக அனுமதிப்பதில்லை என்ற நகர்வு அரசாங்கத்தரப்பில் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது உண்மையான தகவலாக இருக்குமானால், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவில் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் உள்ளுர் தேர்தல் கண்காணிப்பாளர்களும் இது தொடர்பில் தமது கவனத்தை செலுத்தியுள்ளனர். இது பாரிய தேர்தல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனவே, தேர்தல்கள் ஆணையாளர் உரிய நேரத்தில் உரிய முடிவை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை, 1989 ஆம் ஆண்டுக்கு பின்னர் வன்னியில் உள்ள வாக்காளர்கள் தமது பதிவுகளை புதுப்பித்துக் கொள்ளாமையால், இந்தமுறை தேர்தல் வாக்களிப்பின் போது நடைமுறைப் பிரச்சினைகள் எதிர்நோக்கப்படும் என தேர்தல்கள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அதாவது பெரும்பாலான இளைஞர் யுவதிகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் போகக்கூடிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் : சரத் பொன்சேகா
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:33.42 PM ]
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். [மேலும்]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்!
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:39.22 PM ]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புப் போர் தொடர்கின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காகத் தமிழீழ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயிர் வாழும் சலுகை தற்போது மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:08.13 PM ]
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். [மேலும்]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:37.56 AM ]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். [மேலும்]
விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்றம் அனுமதி
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:10.19 AM ]
இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான.... [மேலும்]
புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 07:04.31 AM ]
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது.......... [மேலும்]
விளம்பரம்