Switch to
   
   
   
செய்தி
இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாச படங்களைத் தடைசெய்ய துரித நடவடிக்கை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 02:09.26 AM GMT +05:30 ]
கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாசப் படங்களைத் தடை செய்வது தொடர்பாக பெண்கள், சிறுவர்களுக்கான பொலிஸ் பிரிவு நேற்று புதன்கிழமை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, கொழும்பு பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்ப சிரேஷ்ட அதிகாரிகள், பம்பலப்பிட்டி சிறுவர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக அறிக்கையொன்றை வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்ததையடுத்து பெண்கள், சிறுவர்களுக்கான பொலிஸ் பிரிவு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான அறிக்கையொன்றை தான் பொலிஸாரிடம் கோரியிருப்பதாக திங்கட்கிழமை ஜனாதிபதி அறிவித்திருந்தார். அத்துடன் சிறுவர்களுக்கு எதிரான சகலவிதமான துஷ்பிரயோகங்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

பல்வேறுபட்ட முறைப்பாடுகள் தொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கு தான் கொண்டு சென்றிருந்ததாகவும் தனிப்பட்ட முறையிலும் பல முறைப்பாடுகளை தான் பெற்றிருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். நாட்டிலிருந்து சிறுவர் துஷ்பிரயோகத்தை இல்லாமல் செய்வதற்கான சகல முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.

கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாசப் படங்களைத் தடை செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை பொலிஸார் நாடியுள்ளனர். இந்த தொலைபேசிகளில் இலவசமாக ஆபாசப் பட இணையத்தளங்களை பார்க்கக் கூடியதாக இருப்பதால் துஷ்பிரயோகம் மற்றும் வல்லுறவு சம்பவங்கள் அதிகரிப்பதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களில் இளம்பராயத்தினர் கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாசப் படங்களைப் பார்க்கும் விடயங்கள்அதிகரித்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.இதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பொலிஸாருக்கு உதவுவதற்கு கையடக்க தொலைபேசி இயக்குநர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
"அகம் புலம் தமிழர் வாழ்வியல் மாநாடு" சிறப்புற வாழ்த்துகின்றேன்: கி.வீரமணி
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:55.06 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டியக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். [மேலும்]
ஈழத் தமிழ் மக்களை மீட்டுச் சேர்க்க வேண்டிய மாபெரும் பணியினை நாம் மேற்கொள்ளவேண்டும்: பழ.நெடுமாறன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:52.36 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். [மேலும்]
உலகத் தமிழினம் தமிழினக் காப்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்: காசி ஆனந்தன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:41.45 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற கவிஞர் காசி ஆனந்தன் தன் சிறப்பு  வாழ்த்தறிக்கை  ஒன்றினை வெளியிட்டிருந்தார். [மேலும்]
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] []
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்]
(2ம் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] []
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement