Switch to
   
   
   
செய்தி
தெல்லிப்பளை வைத்தியசாலைப் பிரதேசம் பாதுகாப்பு வலயத்திலிருந்து நீக்கம்
[ புதன்கிழமை, 10 மார்ச் 2010, 03:05.39 AM GMT +05:30 ]
தெல்லிப்பளையில் ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை ஆகியன அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு யாழ்.நகரில் இராணுவத்தின் புதிய சிவில் நிர்வாக அலுவலகத்தை நேற்றுத் திறந்து வைத்துப் பேசுகையில், இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா தெரிவித்தார்.


தெல்லிப்பளையில் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகள் சிலவும் பயிர்ச்செய்கை நிலங்களும் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறினார்.

இராணுவத் தளபதி மேலும் தெரிவித்ததாவது:

கடந்த பல வருடங்களில் பல உயிர்களை இழந்து போர் சூழலில் வாழ நேர்ந்தது. இலங்கை மக்களாகிய நாம் அவ்வாறன ஒரு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக குறிப்பாக 1971ஆம் ஆண்டிலிருந்து இலங்கைத் திருநாட்டினது ஒருமைப்பாட்டையும் தேசிய உணர்வுகளையும் சீரழிக்கின்ற ஆயுத கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் ஆத்ம பலத்தை பெற்றுள்ளோம்.

ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற எண்ணக் கருவின் அடிப்படையில் வடக்கின் வசந்தம் என்ற சொத்தை அபிவிருத்தி செய்வதற்கு நீங்கள் அனைவரும் முனைப்புடன் உள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

யாழ்ப்பாண மாவட்ட மக்கள் சாந்தியும் சமாதானத்துடனும் சந்தேகமெதுவுமின்றி சுதந்திரமாக வாழ்வதற்கு அவசியமான சூழலை உருவாக்கியுள்ளோம். தற்போது யாழ்.மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடி களும், சிறு சோதனைக் குடிசைகளும் குறைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை ஊரடங்குச் சட்டமும் முழுமையாக நீக்கப்பட்டு மக்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தெல்லிப்பளை  மற்றும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வீடுகள், பயிர்ச்செய்கை நிலங்கள் போன்றன மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு மீன்பிடித் தொழிலாளர்களின் பிரச்சினைகளை நீக்கவும் பாதுகாப்பு இடையூறுகளை நீக்கவும் இலங்கை அரசும் பாதுகாப்பு அமைச்சும் நடைமுறைகளை வகுத்துள்ளன என்றார்.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement