Switch to
   
   
   
செய்தி
யாழ்.நகரில் வர்த்தக நிறுவனங்களின் விளம்பர போட்டி கைகலப்பு வரை.....
[ புதன்கிழமை, 10 மார்ச் 2010, 03:18.04 AM GMT +05:30 ]
யாழ்.நகரில், தென்பகுதியிலிருந்து வரும் பிரபல வர்த்தக நிறுவனங்களின் ஏட்டிக்குப் போட்டியான முறையில் மேற்கொள்ளப்படும் விளம்பர நடவடிக்கைகள் கைகலப்புவரை செல்லத் தொடங்கியுள்ளன.

யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் நவீன சந்தைக் கட்டடப் பகுதியில் இவ்வாறானதொரு சம்பவம் அண்மையில் நடைபெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

குறித்த பகுதியிலுள்ள சுவர்களில் ஏற்கனவே ஒட்டப்பட்ட விளம்பரச் சுவரொட்டிகளை கிழித்து விட்டுப் பிறிதொரு நிறுவனத்தினர் தமது விளம்பரங்களை அங்கு ஒட்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு விரைந்த மற்றைய நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகள் ஏன் இந்த விளம்பர சுவரொட்டிகளை கிழித்தெறிகிறீர்கள்? என்று அதட்டிக் கேட்டனர்.

இதன் போது இரண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்புவரை சென்றது. இதனால் பொதுமக்களும் வேடிக்கை பார்க்க வீதியில் குவியத் தொடங்கினர்.

உடனே அங்கு விரைந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் இரு நிறுவனப் பிரதிநிதிகளையும் சமாதானப்படுத்தி விட்டுச் சென்றனர்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement