Switch to
   
   
   
செய்தி
வடக்கின் அபிவிருத்திக்கும் அரசாங்கத்திற்கும் குமரன் பத்மநாதன் உதவிவருகின்றார்: கெஹலிய தகவல்
[ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 12:50.30 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தரீதியில் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாட்டிற்கு உதவுமாறு புலம்பெயர் தமிழர்களிடம் கேட்டிருந்தோம். அந்தவகையில், கே.பி. வடக்கின் அபிவிருத்திக்கும் அரசாங்கத்திற்கும் உதவி வருகின்றார் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

பயங்கரவாதமும் புலிகள் இயக்கமும் யுத்த ரீதியில் தோற்கடிக்கப்பட்டுள்ளன. பிரபாகரனின் இரும்பு சப்பாத்து பிடியில் மூன்று தசாப்த காலங்களாக சிக்கியிருந்த மக்கள் மீட்கப்பட்டுள்ளனர் அவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும்.

புலம் பெயர்ந்த தமிழர்களில் சகலரும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை எதிர்க்கவில்லை பலர் ஒத்துழைப்பு நல்கின்றனர். புலம்பெயர்ந்தவர்களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்களே அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை எதிர்க்கின்றனர்.

வடக்கின் அபிவிருத்திக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கும் குமரன் பத்மநாதன் (கே.பி)  ஒத்துழைப்பு நல்கிவருகின்றார். விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவரே சர்வதேச ரீதியில் நிதி திரட்டுபவராக இருந்தார் அந்த காலத்தில் அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய துப்பாக்கிகளையும் ,ரவைகளையும், வெடிமருந்துகளையும், கப்பல்களையும் கொள்வனவு செயற்வதற்கே அவர் உதவினார்.

தற்போதைய சூழ்நிலையில் அவர் அழிவுகளுக்கு அல்லாமல் ஆக்கத்திற்கான உதவிகளை செய்து வருகின்றார் மீள் நிர்மாணக் கட்டமைப்புகளை முன்னெடுப்பதற்கு அவர் உதவிவருகின்றார். அரசியல் ரீதியாகவே அவர் உதவிகளை செய்து வருகின்றார்.

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட ஒருவரை சாட்சியாக மாற்றும் உரிமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. சட்டத்திலும் அதற்கு இடமிருக்கின்றது. அதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை . சட்டமா அதிபர் அரசாங்கத்திற்கு சட்ட ஆலோசனைகளை வழங்குகின்றார் சட்டத்தை எம்மால் தீர்மானிக்க முடியாது நீதிமன்றமே அதனை தீர்மானிக்கும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் சில வேலைகளில் கபரகொய்யாவும் உடும்பாகலாம்.

நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே கே.பி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கிவருகின்றார் அதில் எவ்விதமான பிரச்சினையும் இறைமைக்கும் அகௌரவமும் இழுக்கும் ஏற்படாத வகையில் அரசியலமைப்பின் கீழ் நாம் செயற்பட்டு வருகின்றோம்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement