இவரது பதவிவிலகலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு பதில் உபவேந்தராக கே. பிரேமகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாணவர் குழு ஒன்று வந்து முன்னர் சிங்கள மாணவர் ஒருவரின் கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்யவேண்டும் உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தம்மை பதவிவிலகுமாறு கோரியதாக முன்னாள் உபவேந்தர் என். பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தாம் நேற்று தமது பதவியில் இருந்து விலகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்தில், அரசியல் தலையீடுகள் அதிகரித்தமையின் ஒரு கட்டமாகவே இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் அமைச்சர் கருணாவின் ஆதரவு மாணவர்களின் அழுத்தம் காரணமாகவே பத்மநாதன் பதவிவிலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே முன்னாள் உபவேந்தர் எம் மூக்கையாவும் இவ்வாறான தனிப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே தமது பதவியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. |