நாடு கடந்த ஊடகவியலாளர்களின் சேவை தற்போது அரசாங்கத்துக்கு தேவைப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கத்தின் பல்வேறு பணிகளை முன்னெடுக்கவும், அவற்றை விஸ்தரிக்கவும், நாடு கடத்தப்பட்ட மற்றும் நாட்டில் இருந்து வெளியேறிய ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்பி, தம்முடன் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் வெளிநாடுகளில் இருந்தால், அவர்கள் அரசாங்கத்துக்கு எதிராகவே செயற்படுவார்கள், எனவே அதனால் எந்த பயனும் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே ஊடகவியலாளர்களை மீண்டும் இலங்கை அரசாங்கம் நாட்டுக்கு அழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஊடகவியலாளர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என அமெரிக்க அரசாங்கம் அழுத்தம் கொடுத்தமையினாலேயே இம்முடிவை எடுத்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். என தெரிவிக்கப்படுகிறது. |