Switch to
   
   
   
செய்தி
சுவிஸ் மார்ச் 28 தேர்தலுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் தொடர்புகள் ஏதுமில்லை: வி. ருத்ரகுமாரன்
[ வியாழக்கிழமை, 11 மார்ச் 2010, 10:09.12 AM GMT +05:30 ]

சுவிஸ் நாட்டில் மார்ச் மாதம் 28 ஆம் திகதி சுவிஸ் தமிழ் டயாஸ்பொறா (Swiss Tamil Diasppra)  என்ற அமைப்பு நடாத்தப்போவதாக அறிவித்துள்ள தேர்தலுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் இடையே எவ்வித தொடர்புகளும் இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் இதற்கென நாடுவாரியாக அமைக்கப்பட்டு வரும் சுயாதீனமான செயற்பாட்டுக் குழுக்களால் மட்டுமே ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக திரு ருத்ரகுமாரன் மேலும் தெரிவித்ததாவது:-

சுவிஸில் வாழும் மக்கள் மத்தியில் இருந்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை அறிவிக்கும் பிரசுரம் ஒன்றில் மேற்படித் தேர்தல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காகவுமே நடைபெறுகின்றது என்று குறிப்பிடப்பட்டிருப்பது உண்மைக்கு மாறான தகவலாகும். எம்முடன் எவ்வித கலந்தாலோசனையுமின்றி இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரிய நேர்மையற்ற ஒரு செயற்பாடாகும்.

ஏப்ரல் இறுதியில் தேர்தல்

நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளைத் நேரடியாகத் தேரந்தெடுப்பதற்கான தேர்தல்களை ஏப்ரல் மாத இறுதியில் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுவிஸிலும் இதற்கான ஏற்பாடுகளை நாம் ஆரம்பித்துள்ளோம். இத் தேர்தலை சுவிஸில் ஒழுங்கமைத்து நடத்துவதற்கான எற்பாடுகளை மேற்கொள்வதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான சுவிஸ் செயற்பாட்டுக்குழு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இக் குழுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்களை சுவிஸில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் மக்களுக்கிடையேயிருந்து நேரடியாக, இதற்கென நடாத்தப்படும் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படுவரென நாம் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம். இவ்வழிமுறைதான் மக்களுக்கு நாடு கடந்த அரசாங்கத்தில் கூடுதல் உரித்துரிமையைக் கொடுக்கும். அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் கூடுதல் ஏற்புடைமையைத் தரும். மேலும் எந்த நோக்கத்திற்காக இந்த அமைப்பு உருவாக்கப்படுகின்றதோ அந்த நோக்கை நிறைவேற்றப் பொருத்தமானவர்கள் யார் என்பதை மக்கள் ஆராய்ந்து, அதற்குரியவர்களை தாமே நேரடியாகத் தெரிவு செய்ய வாய்ப்பளித்தலே மக்களை மதிக்கும் ஜனநாயகப் பண்பாக இருக்கமுடியும்

 மேலும், நாடுகள்தோறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை நடத்தி, பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வை மே 17 – 19 க்கு இடைப்பட்ட காலத்தில் கூட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத்தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும்.

ஐரோப்பாவில் 65 - சுவிஸில் 10 பிரதிநிதிகள்:

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் 135 பேரில் 115 பேர் மக்கள் மத்தியில் இருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இவர்களில் 65 பேர் ஐரோப்பாவிலிருந்து  தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பிரித்தானியாவிலிருந்து 20 பேரும், பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா 10 பேரும், நோர்வே, டென்மார்க், Benelux  (நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பேர்க்), இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து தலா 3 பேரும், சுவீடன், பின்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒருவருமாக 65 பேர் ஐரோப்பாவிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர் என ருத்ரகுமாரன் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளியீடு:
அனைத்துலகச் செயலகம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு
தொடர்புகளுக்கு: info@govtamileelam.org


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement