|
|
|
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புதிய முகங்கள் பல களத்தில் |
| [ செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2010, 06:03.47 AM GMT +05:30 ] |
எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடவென புதுமுகங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
புதிதாக அறிமுகப்படுத்தப்படுபவர்கள் யாழ். சமூகத்துடன் நல்லுறவை பேணி வருவதாகவும் கூறப்படுகிறது. பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பல புது முகங்களை களத்தில் இறக்கியுள்ளனர்.
இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் தமிழரசுக் கட்சி செயலாளர் குலநாயகம், சட்டத்தரணி ரெமேடியஸ், யாழ்.பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர், யாழ்.பல்கலைக் கழக மாணவன், நல்லூர் ஆசிரியர் ஒருவர், சாவகச்சேரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர், கிளிநொச்சியின் பாடசாலை அதிபர், தமிழரசுக் கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் உட்பட்டோர் போட்டியிடுகின்றனர்.
இது தொடர்பான இறுதி முடிவு இன்று ஆராய்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன் யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகை தரும் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்து இணைந்திருக்கும் இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியுடன் இணைந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் உத்தியை அரசு உட்பட பல் வேறு தரப்பினரும் மேற்கொண்டுள்ளன. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றினை கருத்தில் கொண்டு யாழ். மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்களை தேர்தல் களத்தில் ஈடுபடுத்த கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் சிவாஜிலிங்கத்தின் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஆளும் தரப்பினர் எவரும் வெற்றி கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்புகிறது. |
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|