மொனராகலை – தம்பகல்ல – கெசல்வத்த பிரதேசத்தில் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார கோளாறு காரணமாக தனது வீட்டில் மின் திருத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே மின்சாரம் தாக்கி குறித்த நபர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவத்தில் 31 வயதுடைய ஒருவரே பலியாகியுள்ள அதேவேளை சடலம் பிரேத பரிசோதனைக்காக மொனராகலை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.