குருநாகல் கலுகமுவ பகுதியில் பஸ் ஒன்றுடன் மோதி சீன நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட 55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வீதியின் குறுக்காக செல்ல முயற்சித்த போதே பஸ்ஸில் மோதி காயமடைந்துள்ளார்.
பலத்த காயங்களுக்கு மத்தியில் குறித்த நபரை குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போது, சிகிச்சையின் பலனின்றி உயிரிழ்ந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.