மினுவங்கொட பகுதியில் போலி வாகன அனுமதிப் பத்திரம் வைத்திருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த ஐவரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐவரும் பஹலகம,மாபொல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.