மட்டக்களப்பில் சற்று முன்னர் துப்பாக்கி பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களுதாவளைப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இயக்குனர் நேசகுமார் விமல்ராஜ் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பில் சற்று முன்னர் துப்பாக்கிச்சூடு
களுதாவளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், மட்டக்களப்பு – கச்சேரிக் காணிப் பிரிவுப் பணிப்பாளர் படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுதாவளைப் பொலிஸார் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்ணன்