பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் பிரியந்த பெர்னாண்டோ வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
இவர் இலங்கை வரும் போது, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணியாளர்களுடன் செல்ஃபி எடுத்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இதனை அடுத்து அவர் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டதுடன், ஜனாதிபதியின் உத்தரவில் அவர் மீண்டும் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் பிரியங்கர பெர்னான்டோவின் பாதுகாப்பு மற்றும் தூதரகத்தின் நற்பெயரை கருத்தில் கொண்டு அவர் மீண்டும் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.