ஈழப்போர் நடைபெற்று முடிந்து விட்டது. ஆனால் அந்த யுத்தம் தந்த வடுக்கள் இன்றும் அங்குள்ளவர்கள் மனதிலும், அவர்களது வாழ்க்கையை விட்டும் நீங்காத வடுவாக உள்ளமை அனைவரும் அறிந்த விடயமே.
அவ்வாறுதான் கிளிநொச்சியில் கண் பார்வையை இழந்தவர்களை சந்திக்க இவ்வாரம் ஐ.பீ.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சி சென்றது.
இவ்வாரத்திற்கான குறித்த நிகழ்ச்சி மிகவும் நெகிழ்ச்சி மிக்கதாகவும், மனதை உருக்கும் வகையிலும் இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் முன்னாள் போராளிகளாக இருப்பதுடன், புலிகளின் முக்கியஸ்தர்களுடன் இருந்தவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக காணப்படுகின்றது.
இவர்களுக்கு உதவ விரும்புகின்றவர்கள் பின்வரும் தொடர்பிலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்: 0094 21 203 0600, 0094771377306