யாழ். வல்வெட்டித்துறையில் நேற்றைய தினம் மிக சிறப்பாக பட்டத் திருவிழா நடைபெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்ற இந்த பட்டத் திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பெருமளவானோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது புஸ்பக விமானம், பீரங்கி உள்ளிட்ட வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் வானில் பறந்து அங்கு வந்திருந்த மக்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியிருந்தன.