6 கிலோகிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகரப் பகுதியில் இன்று அதிகாலை, பொதிகளாக்கப்பட்ட நிலையில் கஞ்சாவை வீதியில் வைத்திருந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் எழுதுமட்டுவாள் பகுதியை சேர்ந்தவர் என்றும், வேறு நபர் ஒருவருக்கு அந்த பொதிகளை கைமாற்ற நின்ற போதே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.