நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3876 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்றிரவு 11.00 மணிமுதல் இன்று அதிகாலை 3.00 மணி வரையில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமையவே நாடளாவிய ரீதியில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களில் 904 பேர் போதையுடன் வாகனம் செலுத்தியவர்கள் எனவும், 950 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும், 1033 பேர் போதைப் பொருட்களை வைத்திருந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.