கொழும்பு - கிறான்பாஸ் கலைமகள் தமிழ் பாடசாலையில் புதிய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் தலைமையில் அவரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இடம்பெற்றுள்ளது.
மேலும் பிரதம அதிதியாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.