திருகோணமலை - உப்புவெளி பகுதியில் 11 கேரள கஞ்சா பக்கட்டுக்களை வைத்திருந்த நபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமீலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் செல்வநாயகபுரம், திருகோணமலை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.