வவுனியா - ஓமந்தை, பாலமோட்டை மாணிக்க பிள்ளையார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆலய நிர்வாக சபையினர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ப.சத்தியலிங்கம், தமிழ் தெற்கு பிரதேசசபை உறுப்பினர் அஞ்சலி கோகிலகுமார், கிராம அலுவலகர், ஆலய நிர்வாக சபை தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.