நாட்டில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பின் மதங்களுக்கு இடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை இட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 360 இற்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படவுள்ளதாகவும், உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை செய்யும் குழு தெரிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலனவை, தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுடையது என தெரியவந்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான பிரச்சாரங்களை பரப்புவோரைக் கண்டறிவதற்கு 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறான கணக்குகளை முடக்குவதுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.