வடமாகாண பேரவைச் செயலகத்தின் செயலாளராக ரூபினி வரதலிங்கம், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமன நிகழ்வு நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும், தொழில்முனைவோர் மேம்பாடும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளராக ஆர்.வரதீஸ்வரன் ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் நியமனக்கடிதங்கள் ஆளுநரினால் வழங்கப்பட்டதுடன் இந்த நியமனங்கள் 2019 ஜுலை 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.