ஓய்வு பெற்ற கோட்டக் கல்வி அதிகாரி ச.மாட்டின் டயஸ் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது.
மன்னார் நகர சபை கோட்போர் கூடத்தில் நேற்று காலை மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அந்தவகையில், வடமாகாண பிரதி பிரதம செயலாளர் ஸ்ரான்லி டிமேல் இலகு ஆங்கிலம் எனும் நூலினை வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைத்துள்ளார்.
இதன்போது பிரதம விருந்தினராக வடமாகாண பிரதி பிரதம செயலாளர் ஸ்ரான்லி டிமேல் மற்றும் விருந்தினராக மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் ஜே.ஜே.பிறட்லி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.