வவுனியா - ஓமந்தை, விளக்குவைத்த குளம் பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட மோட்டார் செல் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வெடிப்பொருள் இருப்பது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வெடிப்பொருளை மீட்டுள்ளதுடன், அதனை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.