பிரதமர் மகிந்த ராஜபக்ச கலந்துக்கொள்ளும் பேச்சுவார்த்தைகளில் அவர் அமர்ந்திருக்கும் ஆசனத்திற்கு எதிரில் கண்ணாடி அரண் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் மீண்டும் தலைத்தூக்கி உள்ள நலையில், அதில் இருந்து தற்காத்துக்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதமர் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் நபர்கள், சுகாதார ஆலோசனைக்கு அமைய ஒரு மீற்றர் தூர இடைவெளியில் அமரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.