கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை 300 தாண்டியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்களில் இதுவரை 156 பேர் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை அட்டாளைச்சேனையில் 13 பேரும், அக்கரைப்பற்றில் 6 பேரும், ஆலையடிவேம்பில் 2 பேரும், திருக்கோவில் மற்றும் கல்முனை தெற்கு ஆகியவற்றில் தலா ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது.
எனவே மக்கள் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தல் சட்டங்களையும், சுகாதார நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
பொதுமக்கள் மிகவும் விழிப்பாக செயற்பட்டு தகவல்களை சுகாதார துறையினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.