திருகோணமலை-சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப் பகுதியில் 5 கைக்குண்டுகள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சேருவில இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாகவும், மீட்கப்பட்ட கைக்குண்டுகளை திருகோணமலை சர்தாபுர விஷேட பொலிஸ் அதிரடி படையினர் செயலிழக்கச் செய்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கைக்குண்டுகள் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட எஸ்.எப்.87 வர்க்கத்தை சேர்ந்தது எனவும் சேருவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.