திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீட்டு வளாகத்தில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் முள்ளிப்பொத்தானை எட்டாம் கொலனி பகுதியைச் சேர்ந்த முகம்மட் அசூர் (39 வயது) என தெரியவருகிறது.
தம்பலகாமம் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவரது வீட்டைச் சோதனையிட்ட போது வீட்டு வளாகத்தில் நான்கு அடி உயரமான கஞ்சா செடி வளர்க்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபரை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.