வவுனியாவில் கொரோனா தொற்றுடன் மாணவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்காலிகமாக சில பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
இவ்வாறு மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் செயற்படும் என வலய கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைவாக வவுனியா தெற்கு வலயக் கல்வி திணைக்களத்திற்குட்பட்ட 5 பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மீண்டும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரம் நாளை முதல் பாடசாலைகளை திறந்து கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.