யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்ட இடத்தில் இரவில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை இங்கிருந்து அகற்றும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளதன் காரணமாகவே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது மாணவர்கள் தாம் குறித்த இடத்தில் யாருக்கும் இடையுறாக இல்லையெனவும், தம்மை குறித்த இடத்திலிருந்து அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாமெனவும் தெரிவித்துள்ளனர்.