இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276 ஆக உயர்வடைந்துள்ளது.
பேலியகொடையை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரும், அத்துருகிரியவை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.