கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 02 பேர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது.
கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்த 69 வயது ஆண் ஒருவரும் மற்றும் ரனால பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.