ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் கோவிட்-19 தடுப்பூசி மருந்துகளைச் செலுத்திக் கொண்டதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரமபுக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதனடிப்படையில், ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்காலத்தில் கோவிட்-19 இரண்டாவது தடுப்பூசி மருந்தைச் செலுத்திக்கொள்ள உள்ளனர்.