பேராதனை பல்கலைக்கழகம், இன்று முதல் மீண்டும் தமது கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது.
காய்ச்சல் நோய்த் தொற்று காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது.
இன்று முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி உபுல் பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு இடையே ஒருவகை காய்ச்சல் பரவியதன் காரணமாக, கடந்த 4ம் திகதி பேராதனை பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது.
இதேவேளை, நோய்த் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த ருஹுணு பல்கலைக்கழகம் நேற்று முதல் கல்வி செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.