இந்திய மீனவர் பிரிட்ஜோ கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.
உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன் போது விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் கடற்படை தொடர்பு படவில்லை என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், எனினும் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தினார்.
இந்திய மீனவர்கள் கடல் எல்லை தாண்டுவதை நாம் அனுமதிக்கவில்லை. அவர்கள் அவ்வாறு செயற்பட்டிருந்தால் கைது செய்து சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
அதுவே உகந்த நடவடிக்கையாக அமையும் என்றும் சுட்டுக் கொல்லப்படுவது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும் என தெரிவித்திருந்தார்.