இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேசிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் (Najib bin Tun Abdul Razak) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு இன்று காலை வருகை தந்த மலேசியப் பிரதமரை ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
இந்த சந்திப்பில், விஞ்ஞானம் தொழில்நுட்பம் புத்தாக்கம், உயிரியல் பொருளாதார அபிவிருத்தி மற்றும் இராஜதந்திர அதிகாரிகளைப் பயிற்றுவித்தல், போன்ற மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.