நல்லாட்சி அரசாங்கத்தின் இன்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவர் அமைச்சராக நியமிக்கப்படவில்லை.
ரவி கருணாநாயக்க அமைச்சராக நியமிக்கப்படுவது பொருத்தமானது என ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்திருந்த போதிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் ரவி கருணாநாயக்கவின் பெயர் இடம்பெறவில்லை.
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்கவின் பெயர் பேசப்பட்டதன் காரணமாக, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக பின்னர் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் ரவி மீது நேரடியாக குற்றம் சுமத்தப்படவில்லை.
ரவி கருணாநாயக்க மீது குற்றம் சுமத்தப்படாமை மற்றும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்படாத நிலையில், அமைச்சராக நியமிக்கப்படாதது அநீதியானது என ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரிடம் கூறியுள்ளனர்.